செவ்வாய், வெள்ளி கிழமைகளில் தான தர்மம் செய்யலாமா…?

December 24, 2022 at 12:16 pm
pc

செவ்வாய்க்கிழமை முருகனுக்கும், வெள்ளிக்கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது. நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், நமது வீட்டில் அவைகள் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள் புரிகிறது.

இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பண பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நம்மிடம் இருக்கும் அனைத்து செல்வங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாகும்.

மேலும் அத்தியாவசிய முக்கியமான சில செயல்பாடுகளை தவிர்த்து இந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாது. பொதுவாக வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை வணங்கி தானமளிக்கலாம்.

அதேபோல் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வணங்கி ஏழைகளின் திருமணத்திற்கு உதவி செய்யலாம். செவ்வாய்க்கிழமைகளில் நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால் தான் தான தருமங்களை செய்தால் தர்மம் செய்வது அதிகரிக்கும்.

இந்நிலையில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தான, தர்மம் செய்வதற்கு ஆகாது என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் அவர்கள் அனைத்தும் மூடநம்பிக்கைகள் ஆகும். உங்களுக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என நினைத்தால் தவறாமல் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தேடிப்பிடித்து செய்து, இம்மைக்கும், மறுமைக்கும் பயன் பெறுங்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website