சொகுசு வாழ்க்கைக்காக 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த இளைஞர்கள்!

October 4, 2022 at 1:09 pm
pc

டெல்லியின் லோதி காலனி பகுதியில் மர்மமான முறையில் 6 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இத குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் பீகாரைச் சேர்ந்த அமீர்குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய இளைஞர்கள் சிறுவனை கொலை செய்ததுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், ”பணக்காரனாக வாழ கடவுள் சிறுவனை பலி கொடுக்க கூறியதாகவும் அதனால் சிறுவனை கொன்றதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website