சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று
சோனியா காந்திக்கு கடந்த 3 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான ப்ரியங்கா காந்திக்கு கடந்த ஆகஸ்ட் 10-ம் தொற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவர் தன்னை வீட்டிலேயே தனிமை படுத்திக்க கொண்டார். அவருக்கும் 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு நெறிமுறைகளின்படி, அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.