ஜனாதிபதியை யாரோ அழிக்க முயற்சி!

November 8, 2023 at 7:25 pm
pc

ஜனாதிபதியை யாரோ அழிக்க முயற்சிக்கின்றனர் என்பது தனக்கு நன்றாக தெரிகின்றது எனத் தெரிவித்த விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, கிரிக்கெட்ட நிறுவனத்தில் இருக்கும் ஊழல், மோசடிகாரர்களை ஜனாதிபதியிடம் நெருங்குவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் கேட்டுக்​கொண்டார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஜனாதிபதி காரியாலயத்துக்குள்ளும் பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று தெரிவித்த அமைச்சர், அது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.நாட்டின் அமைச்சரை அச்சுறுத்தும் வகையில், திருடர் கும்பல் சக்தி வாய்ந்தது. ஐ.பி.எல் போட்டியை ஜனாதிபதி கண்டு களித்துக்கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் கிரிக்கெட்டி நிறுவனத்தின் ஷம்மித் சில்வாவின் பாதுகாவலர்கள் நின்றிருந்தனர். அவர்கள் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website