ஜீன்ஸ் அணிய தடை போட்ட கணவன் …கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி!
ஜார்க்கண்ட் மாநிலம் ஜோர்பிதா கிராமத்தை சேர்ந்தவர்கள் கர்ணேஷ்வர் டுடு, புஷ்பா ஹெம்பிரம் தம்பதி. சம்பவத்தன்று, கண்காட்சிக்கு ஜீன்ஸ் அணிந்து கொண்டு சென்ற புஷ்பா பின்னர் வீடு திரும்பியுள்ளார். அவரை ஜீன்ஸ் உடையில் பார்த்த கணவர், இனி ஜீன்ஸ் உடையெல்லாம் அணிய வேண்டாம் என கேட்டு கொண்டார். ஆனால், புஷ்பா ஜீன்ஸ் அணிவதில் விடாப்பிடியாக இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில், ஆத்திரமடைந்த புஷ்பா, தனது கணவரை கத்தியால் குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த டுடு-வை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தும் அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.