ஜூஸ் என நினைத்து பினாயிலைக் குடித்த ஏழாம் வகுப்பு மாணவன் பலி…

February 22, 2023 at 9:26 pm
pc

தென்காசியில் ஜூஸ் என நினைத்து பினாயிலைக் குடித்து ஏழாம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம், முதலியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது அமீன். இவரது மகன் முகம்மது பீர்மைதீன். 12 வயதாகும் பீர்மைதின் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், முகம்மது பீர்மைதீன் கடந்த 17-ம் தேதி தன் வீட்டில் இருந்த பினாயில் பாட்டிலை ஜூஸ் என நினைத்து தவறுதலாகக் குடித்துவிட்டார். இதை எதேச்சையாகப் பார்த்த அவனது தாய் சரபுள்பானு உடனே ஓடிவந்து பினாயில் பாட்டிலைத் தட்டிவிட்டுள்ளார்.

இருப்பினும், முகம்மது பீர்மைதீன் சிறுது நேரத்தில் மயங்கியுள்ளார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மாணவனை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.  

ஆனால், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முகம்மது பீர்மைதீன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் இழந்தார். ஜூஸ் என நினைத்து பினாயிலைக் குடித்து ஏழாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website