ஜெயிலர் படத்திற்காக பல கோடி ரூபாயை சம்பளமாக அள்ளிய நெல்சன்!

September 2, 2023 at 6:57 pm
pc

ஜெயிலர் படத்திற்காக இயக்குநர் நெல்சன் பல கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குனர் நெல்சன். இவர் சினிமாவிற்குள் வரும் போது பெரியளவு வரவேற்பு இல்லாவிட்டாலும் தற்போது அவருக்கு என தனி இடம் உருவாகியுள்ளது.

தளபதியை வைத்து எடுத்த பீஸ்ட் திரைப்படம் சரியாக போகவில்லையென்றாலும் ஜெயிலர் திரைப்படம் அதை யாவற்றையும் உடைத்து ஜெயிலர் திரைப்படம் பல கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இந்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் பல கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

அந்த வகையில் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாயை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சம்பாரித்து கொடுத்துள்ளது.

இதற்காக இயக்குநர் நெல்சனுக்கு 22 கோடி ரூபாயை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த திரைப்படத்திற்காக நெல்சனுக்கு ரூ.55 கோடியை சம்பளமாக கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை கேட்டு தமிழ் சினிமாவே கொஞ்சம் தடுமாறியுள்ளது. டாப் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் தற்போது நெல்சனும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website