ஜெர்மனியில் இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வு..!

இறந்தவர்களை உயிருடன் வர வைப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனால் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள், இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மிகவும் குளிர்ந்த சூழலில் இறந்த உடல்களை அவர்கள் பாதுகாத்து வைத்துள்ளனர். இதையடுத்து இந்த ஆய்வு குறித்து கேள்விப்பட்ட பொதுமக்கள் சிலர் தங்கள் உடலை தானமாக கொடுக்க முன்வந்துள்ளனர். எதிர்காலத்தில் மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்து, இறந்த உடல்களை உயிருடன் கொண்டு வந்தால், அப்போது தாங்கள் உயிருடன் வந்துவிடுவோம் என நம்புவதாக கூறியுள்ளனர்.