டயட் கோக் குடித்தால் கேன்சர் வருமா? என்ன சொல்கிறது ஆய்வு
டயட் கோக்கில் பயன்படுத்தப்படும் Aspartame என்னும் செயற்கை இனிப்பூட்டி மூலம் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
பாட்டில் சோடாக்கள் மற்றும் கோலா பானங்கள் போன்ற குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். அதனால், பலரும் டயட் கோக் மற்றும் ஆர்டிபிஷியல் ஸ்வீட்டனர்ஸ் குடிக்கலாம் என பயன்படுத்துகின்றனர்.
ஆய்வு கூறுவது என்ன?
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் Aspartame என்னும் செயற்கை இனிப்பூட்டி சாதாரண சர்க்கரையை விடை 200 மடங்கு இனிப்பானது. இது உடலுக்கு மிகவும் ஆபத்தானது. டயல் கோக்கிலும் இது உள்ளது. மேலும், இதில் கேன்சரை உண்டாக்கும் ஒரு பொருள் இருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக கேன்சர் உருவாக காரணமாக இருக்கும் காரணிகளை கார்சினோஜென் என்று கூறுவார்கள். கடந்த மாதம் ஜூன் 30 ஆம் திகதி, Aspartame என்னும் செயற்கை இனிப்பூட்டி, கார்சினோஜென் ஆக இருக்கலாம் என உலக சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆஸ்பார்டாம் எனப்படும் செயற்கை இனிப்பூட்டி சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பானது என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு கூறியுள்ளது.
ஒரு கிராம் Aspartame பயன்படுத்தினாலே 2 ஸ்பூன் சர்க்கரை அளவு அதில் உள்ளது. ஒரு கிராம் சர்க்கரையில் 32 கலோரிகள் இருக்கிறது. அப்படியானால், ஒரு கிராம் Aspartame-ல் 40 கலோரிகள் உள்ளது .
அனுமதிக்கப்பட்ட ஆஸ்பார்டாமை பயன்படுத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என WHO, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூட்டு உணவு சேர்க்கைகள் நிபுணர் குழு 1981 ஆம் ஆண்டில் தெரிவித்தது.இதுவரையில் அந்த அளவீடு மாறவில்லை.
வரும் ஜூலை 14 ஆம் திகதி இதனை மறுபரிசீலனை செய்து மீண்டும் இதன் பயன்பாடு பற்றி அறிக்கை வெளியாகவுள்ளது.
சர்க்கரை இல்லாத இனிப்புகள் சாப்பிடலாமா
சர்க்கரை உள்ள இனிப்புகளை விட சர்க்கரை இல்லாத இனிப்புகள் சாப்பிட்டால் பெரிய அளவில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. கூடுதல் உணவை வேண்டுமானால் சாப்பிடலாம்.
மாறாக தினசரி சர்க்கரை இல்லாத இனிப்புகளை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு, கார்டியோ வாஸ்குலார் மற்றும் இணைநோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.