டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு!
2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதில், சென்னை அணி குஜராத்திற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியுற்ற போதும், இரண்டாவது ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது. இதனையடுத்து, தனது 3-வது ஆட்டத்தில் மும்பை அணியை அதன் சொந்த மைதானமான வான்கடே-வில் இன்று எதிர்கொள்கிறது. சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த இரு போட்டிகளிலும் அரை சதம் அடித்து நம்பிக்கை அளிக்கிறார்