டைரி மில்க் சாக்லேட்டில் நெளிந்த புழுக்கள்..அதிர்ச்சி வீடியோ வைரல்

April 3, 2023 at 3:38 pm
pc

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று 85 ரூபாய் மதிப்பிலான டைரி மில்க் சாக்லேட் ஒன்றை வாங்கி உள்ளார்.

அதனை வாங்கிய அவர் வீட்டிற்கு சென்று சாப்பிடலாம் என அதனை கொண்டு வந்து திறந்து பார்த்துள்ளார். அப்போது அந்த சாக்லேட்டில் புழுக்கள் நெளிந்த வண்ணம் இருந்துள்ளன. அதோடு அந்த சாக்லேட்டில் கழிவு பொருட்களும் இருந்துள்ளது.

அதனை கண்டதும் அருண் அதிர்ச்சி அடைந்து காலாவதி தேதியை பார்த்துள்ளார். அதில் செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு தான் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த சாக்லேட்டில் புழுக்கள் நெளிந்தது வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வேகமாக பரவி வைரலாகி வருகிறது. அதனை கண்ட பெரும்பாலான மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே உளுந்தூர்பேட்டையில் உள்ள பல கடைகளில் தரமற்ற பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பலமுறை புகார்கள் எழுந்த நிலையில் உள்ளது. ஆனால் உணவு பாதுகாப்பு துறையினர் குறிப்பிட்ட கடையில் மட்டுமே சோதனை செய்துவிட்டு சென்று விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ந்து பல கடைகளில் குழந்தைகள் சுவைத்து சாப்பிடும் சாக்லேட் வகைகள் காலாவதியாகி விற்கப்படுகிறது. அதோடு தரமற்ற முறையில் உள்ளது.

எனவே அந்த பகுதியில் உள்ள கடைகளை மாநில உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website