ட்விட்டர் மூலம் பணத்தை இழக்கும் எலான் மஸ்க்!
பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ததோடு ட்விட்டர் கணக்குக்கு கட்டணம் நிர்ணயித்துள்ளார்.
அத்தோடு ட்விட்டரில் இலாபத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் மூலம் தனது பணத்தை இழந்து வருவதாக எலான் மஸ்க் தெரிவித்தள்ளார்.
“நாங்கள் இன்னும் எதிர்மறையான பணப்புழக்கத்தில் இருக்கிறோம். விளம்பர வரவால் 50 சதவீதம் குறைந்துள்ளது. அதிக கடன் சுமையும் உள்ளது. இதனால் ட்விட்டர் இன்னும் பணத்தை இழக்கிறது. நாங்கள் நேர்மறையான பணப்புழக்கத்தை அடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.