தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்த காய்கறி வியாபாரி.!

July 9, 2023 at 8:39 pm
pc

லக்னோ, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளியில் விலை அதிகரித்து கானப்படுகிறது. வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு மற்றும் மழை காரணமாக விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, தக்காளிகள் கடையிலும், வயல் வெளிகளிலும் திருடப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துவருகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதால், சிலர் 50, 100 கிராமுக்கு தக்காளி கேட்கின்றனர். கடைக்கு வரும் மக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன், திருட்டிலும் ஈடுபடுகின்றனர். அதனால் பவுன்சர்களை நியமித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website