தக்காளி விலை கிலோ ரூ.100 ஆக அதிகரிப்பு …! இல்லத்தரசிகள் ஷாக்..!

May 19, 2022 at 2:07 pm
pc

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை கிலோ ரூ.100 ஆக அதிகரித்துள்ளது 

சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் தக்காளி விலை தாறு மாறாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் அதிகரித்து கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 

தொடர் மழை பொழிவு, வரத்து குறைவு ஆகிய காரணங்களால் கடந்த 20 நாட்களாகவே தக்காளி விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரு கிலோ தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே திண்டுக்கல் சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை தொட்டிருந்ததை தொடர்ந்து கோயம்பேட்டிலும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு கிலோ தக்காளி கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website