தங்கையை கிண்டல் செய்ததால் கட்டையால் அடித்து கொலை செய்த அண்ணன்!!

July 18, 2022 at 9:29 am
pc

கர்நாடக மாநிலம் நகாஷெட்டி ஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரஜ்வல். இளைஞரான இவர் அப்பகுதியை சேர்ந்த பெண்ணை கேலி, கிண்டல் செய்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த பெண் தனது சகோதரர்களிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் பிரஜ்வலை பிடித்து கண்டித்துள்ளனர். 
அப்போது பிரஜ்வலுக்கும் பெண்ணின் சகோதருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர் அங்கிருந்து கட்டையை எடுத்து பிரஜ்வலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பிரஜ்வல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்வம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த பெண்ணின் சகோதரனை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website