தனிமையில் தவித்த தாய்க்கு 59 வயதில் இரண்டாவது திருமணம் செய்து வைத்த மகள்கள்…

August 20, 2022 at 4:36 pm
pc

தனிமையில் தவித்த தாய்க்கு மகன் இரண்டாவது திருமணம் செய்து வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன்(59). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவர் சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். மகள்களும் திருமணமான நிலையில் தாய் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தனிமையில் இருக்கும் தாய்க்கு மகள் பிரசிதா கண்டிப்பாக ஒரு துணை வேண்டும் என திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.

2வது திருமணம்

இந்த நிலையில், அதே பகுதியில் மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த திவாகரன்(63) என்பவரை தனது தாய்க்கு ஏற்ற துணை என பிரசிதா திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். 2 மகள்களுக்கு தந்தையான திவாகரன் வேளான் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர்.

அவரிடம் பேசிய பிரசிதா. தனது தாய்க்கு துணை வேண்டும். அது நீங்களாக இருந்தால் நல்லா இருக்கும். என உருக்கமாக பேசி இருக்கிறார்.

இதனை புரிந்துகொண்ட திவாகரனும் 2 வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். திவாகரனின் மகள்களிடமும் இது பற்றி பிரசிதா பேச அவர்களும் தந்தையின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர், தாயின் சம்மதத்துடன் திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

மகள் உருக்கம்

இதுகுறித்து மகள் பிரசிதா தெரிவிக்கையில், அப்பா இருக்கும் போதே 2 மகள்களான எங்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. நாங்கள் கணவர் வீட்டில் உள்ளோம்.

இதனால், அம்மாவை அடிக்கடி வந்து சந்திக்க முடியவில்லை. எனவே அம்மாவின் தனிமையை போக்க வேண்டும் என அதற்காக திருமணம் ஏற்பாடு செய்து திருமணத்தை அனைவரின் சம்மதத்தோடு நடத்தினோம் என கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website