தன் தாய் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூற அனுதிக்காததால் ஹாஸ்டலில் சிறுவன் தற்கொலை!!
தன் தாயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க ஹாஸ்டல் வார்டன் அனுமதி மறுத்ததால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹோசகோட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பூர்வாஜ். இவர் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளார். சிறுவனின் தாய்க்கு ஜூன் 11ம் தேதி பிறந்தநாள், இதனால் அந்த சிறுவன் தாய்க்கு வாழ்த்து தெரிவிக்க ஹாஸ்டல் வார்டனிடம் மொபைல் போன் கேட்டுள்ளார். ஆனால் வார்டன் மொபைல் போன் தர மறுத்துள்ளார்.
சிறுவனின் குடும்பத்தினரும் அவரை தொடர்புகொள்ள வார்டனுக்கு கால் செய்துள்ளனர். ஆனால் அப்போதும் வார்டன் மொபைலை தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் தனது அறைக்கு சென்று தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை மற்ற சிறுவர்கள் பூர்வாஜின் அறையை திறந்து பார்த்தபோது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து விடுதி நிர்வாகத்திற்கு சிறுவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.