தமிழகத்தில் ஆணவக்கொலை.., வேறு சமூக இளைஞரை காதலித்த அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி

December 7, 2023 at 8:46 am
pc

தமிழகத்தின், திருநெல்வேலி மாவட்டத்தில் வேறு சமூக இளைஞரை காதலித்த அக்காவை 17 வயது தம்பி வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாற்று சமூக இளைஞருடன் காதல்

திருநெல்வேலி மாவட்டம், இராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசீர் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு, தங்கத்தாய் (20) என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர்.இதில், மகள் தங்கத்தாய் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர், அதே நிறுவனத்தில் பணிபுரியும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது.

இவரின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே, வீட்டில் உள்ளவர்கள் தங்கத்தாய்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கொலை செய்த தம்பி

இந்நிலையில், நேற்று காலை தங்கத்தாய் காதல் விவகார பிரச்சனை வீட்டில் எழுந்துள்ளது. அப்போது, சண்டை தீவிரமடைந்து போது, தங்கத்தாயின் சகோதரர் அரிவாளை எடுத்து அவரை வெட்டியதாக கூறப்படுகிறது.இதில், நிலைதடுமாறிய தங்கத்தாய் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அப்போது, அவரின் சகோதரர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். கொலை செய்த தம்பியை பொலிஸார் தேடி வருகின்றனர். நெல்லையில் ஆணவக்கொலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website