தமிழகத்தில் 15 ம் தேதி கன மழை தொடரும்!! மக்களே எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாக்கியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 15ம் தேதி வரை இந்த வானிலை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.