தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!!
தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 9ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான 12ஆம் தேதியும் மூடப்பட்டிருக்க வேண்டும். வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் அமையப்பெற்ற அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்” என உத்தரவிடப்படுகிறது.