தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி… வெளியான முக்கிய தகவல்…!
தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட்
கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடி வருகை தந்தார்.
இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்புத்தனர்.
பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உரை நிகழ்த்துகையில், வணக்கம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,
‘இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்ற குறளை குறிப்பிட்டு பேசினார்.
துடிப்பான கலாச்சாரம் கொண்ட தமிழகம், தமிழ் மொழியின் தாயகமாகும். தமிழகத்திற்கும், சதுரங்க விளையாட்டிற்கும் நீண்ட வரலாற்று தொடர்பு உள்ளது. தமிழகத்திலிருந்து பல கிராண்ட்மாஸ்கர்கள் உருவாகியுள்ளனர் என்று பேசினார்.
மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
இந்நிலையில், ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கவும், தாம்பரம் – செங்கோட்டை ரெயில் சேவையை தொடங்கி வைக்கவும், திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி ரயில் சேவையையும் தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார்.