தமிழக மாணவி உலக சாதனை!குவியும் பாராட்டு

March 27, 2023 at 8:47 am
pc

திருவள்ளூர் மாவட்டம்,பெரியபாளையம் அருகே கட்டிடக்கலைக்கான தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சிவகாசியை சேர்ந்த கல்லூரி மாணவி புவனேஸ்வரி என்பவர் கட்டிடக்கலை இளங்கலை நான்காம் ஆண்டு பயின்றுவருகின்றார். கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடி பொழுதுபோக்காக வரைபடங்களையும் ஓவியங்களையும் வரைவதை பொழுதுபோக்காகக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.‌ அவ்வாறு ஓவிய போட்டிகளில் சாதனை படைத்து கலாம் உலக உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நோக்கோடு முதற்கட்டமாக 15 மணி நேரம் தொடர்ந்து வரைபடங்கள் வரைந்து சாதனை படைத்தார். தற்போது 18 மணி நேரம் வரைபடங்கள் வரைந்து மீண்டும் கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website