“தமிழக மீனவர்கள் கைகளில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன்” – சீமான் பேச்சு!
ராமநாதபுரம் மாவட்டத்தின் ரெகுநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை திருமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சீமான் பேசுகையில், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் அவர்கள் குடும்பத்துக்கு தான் விடியும், நாட்டுக்கு அல்ல. இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டாம் என கூறும் பாஜக அவர்கள் வரியையும் வேண்டாம் என சொல்லலாமே.
மணிப்பூரில் கலவரத்தை நடத்துவதே பாஜக தான், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என திட்டமிட்டு இனப்படுகொலை செய்து வருகிறது.
தேசத்தை துண்டாட கூடிய கட்சி பாஜக தான் என தெரிவித்துள்ளார்.
மேலும் நான் மட்டும் முதலமைச்சர் ஆனால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு எதிராக தமிழக மீனவர்கள் கைகளில் வெடிகுண்டு, ஆயுதங்கள் கொடுத்து அனுப்புவேன் என தெரிவித்துள்ளார்.