தமிழ் நடிகை அதிரடி கைது..!

February 20, 2024 at 7:13 pm
pc

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் நடிகை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாடலாசிரியர் சினேகன்,’ சினேகம் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் நிலையில் இந்த அறக்கட்டளையின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி சினேகன் புகார் அளித்திருந்தார். சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்,

அதேபோல் சினேகன் தன் மீது அவதூறு பரப்புவதாக நடிகை ஜெயலட்சுமியும் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் இருவரும் மாறி மாறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சற்றுமுன் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார். இன்று காலை திருமங்கலம் போலீசார் அண்ணாநகரில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website