தமிழ் மரபுத் திங்கள் 2024 தொடக்க நாளான நேற்று தமிழ் மரபுத் திங்கள் கொடி ஏற்றி வைக்கப்பட்டது!
சனவரி 1, 2024: தமிழ் மரபுத் திங்கள் தொடக்க நாளான இன்று தமிழ் மரபுத் திங்கள் கொடி மற்றும் கனடியத் தேசியக் கொடி இரண்டும் கனடாத் தமிழ்க் கல்லூரி முன்பாக ஏற்றப்பட்டது. தமிழ் மரபுத் திங்கள் கொடி, கனடாவில் பல நகர சபைகளிலும் தொடர்ச்சியாக ஏற்றப்பட இருக்கின்றது.
தை திங்கள் முழுவதுமாக பல அமைப்புக்கள் தொடர்ச்சியாக, தமிழ் மரபுரிமை சார் நிகழ்வுகளை நடத்துவர். இவ்வாண்டுக்கான கருப்பொருள் நாட்டர் இயல். அனைவரையும் இன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு, தமிழ் மரபையும் அதன் பெருமையையும் எமது அடுத்த சந்ததிக்கும் மற்றும் அனைத்து கனடிய மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் எனக் கோட்டுக் கொள்கின்றோம்.