தயாரிப்பாளருடன் மறுமணம்! பிரபல நடிகை வெளியிட்ட மிக உருக்கமான பதிவு

September 2, 2022 at 10:00 am
pc

சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துள்ள நிலையில், மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகை மகாலட்சுமி

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்பு நடிகையாக வலம் வரும் இவர் வெள்ளித்திரையிலும் தற்போது நடிக்க ஆரம்பித்துள்ளார்.

மகாலட்சுமியின் இரண்டாம் திருமணம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய முந்தைய வாழ்க்கையை மறந்து புது வாழ்க்கையில் அடி எடுத்து வைத்திருப்பதற்கு பல ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ரவீந்தருடன் திருமணம்

வி ஜே மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் இருக்கும் இருக்கின்றனர். மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இந்த நிலையில் ரவீந்திரனோடு தான் திருமணம் செய்த செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றார்

அந்த வகையில் மகாலட்சுமியுடன் தனக்கு திருமணம் முடிந்த தருணத்தில், “என் வாழ்க்கையில் நீ கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி… உன் அன்பினால் என் வாழ்க்கையை நிரப்புகிறாய். லவ் யூ அம்மு!! என்று ரவீந்திரனுக்கு தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website