திடீரென வெளியான ஆபாச போட்டோக்கள்… ‘ராஜா ராணி 2’ நடிகை போலீஸில் கதறல்!

December 31, 2022 at 2:03 pm
pc

நடிகை பிரவீனா

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை பிரவீனா நாயர். 1992 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கவுரி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். களியூஞ்சல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பிரவீனா பல மலையாள படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் படங்கள்

தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி, டெடி, லாபம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு சின்னத்திரையிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் அம்மா கதாப்பாத்திரங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார் பிரிவீனா.

தமிழ் சீரியல்கள்

தமிழ் சின்னத்திரையில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நம்ம குடும்பம் சீரியலின் மூலம் என்ட்ரியானார். தொடர்ந்து மகாராணி, ஆதி பராசக்தி, பிரியமானவள், மகராசி, ராஜா ராணி 2, இனியா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் வலம் வரும் நடிகை பிரவீனா, பல மலையாள படங்களில் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். கேரள மாநில விருதுகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களின் விருதுகளையும் குவித்துள்ளார் நடிகை பிரவீனா.

ஆபாச போட்டோக்கள்

டந்த ஆண்டு தனது போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக புகார் அளித்தார். இதையடுத்து டெல்லியை சேர்ந்த பாக்கியராஜ் என்ற மாணவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த மாணவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நடிகை பிரவீனாவும் அவரது மகளும் சைபர் க்ரைம் போலீஸில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

இவ்வளவு வக்ரமாக இருக்க முடியுமா?

துகுறித்து பேசியுள்ள பிரவீனா, தான் போலீஸில் புகார் அளித்ததால் அந்த நபர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தனது போட்டோக்களையும் தனது குடும்பத்தினரின் போட்டோக்களையும் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுபோன்று யாராவது வக்ரமாகவும் மன நோயாளியாகவும் இருக்க முடியுமா என்றும் நடிகை பிரவீனான வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை பிரவீனா தன்னையும் தனது மகளையும் ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் போட்டோக்கள் வெளியிடப்படுவதாக போலீஸில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website