தினமும் ஷவர்மா சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்தா…!!
ஷவர்மா என்பது மத்திய கிழக்கு நாடுகளில் அனைத்து உணவகங்களிலும் சர்வ சாதாரணமாக கிடைக்கும் ஒரு வகையான உணவாகும். இறைச்சிகளின் கலவையோடு மசாலாப் பொருட்கள் மற்றும் கா ய்கறிகள் நிரப்பப்பட்டு குபூசில் வைத்து சுருட்டி கொடுப்பார்கள். இப்போது அனைத்து ஊர்களிலும் ட்ரெண்டாகி விட்டது.
இறைச்சி பிரியர்களுக்கு விதவிதமான சுவையில் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் ஒரு வித்தியசமான டேஸ்டில் தயார் செய்யப்படும் இந்த டிஸ்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். போர் அடித்தால் சாப்பிடும் அளவிற்கு இந்த ஃபாஸ்ட் புட்க்கு அடிமையாக மாறியும் இருக்கிறார்.
அவ்வாறு தினமும் இந்த ஷவர்மா சாப்பிடுவதால் உடலில் ஏராளமான பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். இப்போது தினமும் ஷவர்மா சாப்பிட்டுவதால் எம்மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை பார்க்கலாம்.
ஷவர்மா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
மூளை பாதிப்பு
ஷவர்மாவில் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு இருப்பதால், இது கற்றல் மற்றும் நினைவக உருவாக்கத்துடன் தொடர்புடைய மூளை செயல்பாடுகளை தடுத்து மூளை பெப்டைட்களுக்கு வழிவகுக்கும். இந்த விஷயங்கள் நினைவாற்றல் இழப்பு மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுப்பதோடு, மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது. அதோடு தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கும்.
உடல்பருமன்
ஷவர்மா போன்ற துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களின் பாதிப்புகளையும் அதிகரிக்கிறது. உடல் பருமன் சுவாச பிரச்சனைகளை அதிகரிக்கும். மேலும், இது எலும்புகளை பலவீனமாக்குகிறது.
சரும பிரச்சனை
ஷவர்மாவில் ஜிரோ கொலஸ்ட்ரால் உள்ளது, இது முக்கியமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து மாரடைப்புக்கு வழிவகுக்கும். மேலும், ஷவர்மா சருமத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஷவர்மாவில் கலோரிகளின் அளவு அதிகளவில் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இது சருமத்தில் முகப்பரு அதிகளவில் உருவாகவும் காரணமாக இருக்கிறது.