திரிஷாவே என்னை மன்னித்துவிடு – மன்சூர் அலிகான் அறிக்கை

November 25, 2023 at 3:44 pm
pc

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சர்ச்சை கருத்து 

பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் நடிகர் மன்சூர் அலி கான் பேசும்போது நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை பெற்றத்தைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

மன்னிப்பு அறிக்கை

இந்த நிலையில் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அவர் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பல விடங்களை குறிப்பிட்டுள்ளார். அவரது அறிக்கையில், ‘பெண்ணில் இருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். 

எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்’ என தெரிவித்துள்ளார்.   

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website