திருகோணமலை கடற்படை முகாமுக்குள் கத்திக் குத்து!

November 8, 2023 at 7:40 pm
pc

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் கத்திக்குத்துக்கு இலக்காகி கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. இன்று அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பண்டார என்ற பெயர் வழங்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website