திருப்பதி கோவிலில்ரொமான்ஸ் செய்த விக்னேஷ் சிவன் நயன்தாரா..!! விளாசும் நெட்டிசன்கள் ..


விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகின்றனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஹிட்டாகியுள்ள நிலையில் இருவரும் வரும் ஜூன் மாதம் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரும் ஏழு மலையானுக்கு நன்றி தெரிவிக்க திருப்பதிக்கு சென்றனர். அங்கு ஜோடியாக எடுத்த போட்டோவை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
அந்த போட்டோவில் இருவரும் கைகளை கோர்த்தப்படியும் அணைத்தப்படியும் ரொமான்டிக் லுக் விட்டுள்ளனர். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் திருப்பதி கோவிலில் இப்படி ஒரு போஸ் தேவைதானா என விளாசி வருகின்றனர்.