திருமணத்திற்கு முன் பெண்கள் உறவுகொண்டால் தப்பில்லை..கூறியவர் தான் குஷ்பூ – பயில்வான் ரங்கநாதன்

November 25, 2023 at 3:39 pm
pc

தேசிய மகளிர் ஆணையத்தில் உள்ள குஷ்பூ, திருமணத்திற்கு முன் பெண்கள் உறவுகொண்டால் தப்பில்லை என்று கூறியதற்கு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என பத்திரிகையிளார் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். 

குஷ்பூ சர்ச்சை

நடிகர் மன்சூர் அலிகான் பேட்டியில் திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகை மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான குஷ்பூ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

மேலும் அவர் ”சேரி மொழி” என குறிப்பிட்டு கருத்து எக்சில்(ட்விட்டர்) தெரிவித்தது புதிய சர்ச்சையாக கிளம்பியது. ஆனால் அதற்கு அவர் தவறாக கூறவில்லை என விளக்கம் அளித்தார்.

பயில்வான் ரங்கநாதன் கேள்வி 

இந்த நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் வீடியோ ஒன்றில் குஷ்பூவை விமர்சித்துள்ளார். 

அவர் கூறுகையில், ‘மன்சூர் அலிகான் பேசியது தவறு தான். ஆனால் அவர் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுப்பதன் காரணம் என்ன? அதில் உறுப்பினராக இருக்கும் குஷ்பூ கூட எவ்வளவு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

அவரது உச்சக்கட்ட சர்ச்சை, திருமணத்திற்கு முன் பெண்கள் உடலுறவு கொண்டால் தப்பில்லை என்று கூறியவர் தான் குஷ்பூ. அப்போது மகளிர் ஆணையத்தில் தவறாக தெரியவில்லையா? நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவிக்கவில்லையே’ என தெரிவித்துள்ளார்.   

 

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website