திருமணமாகி இன்றுடன் 100 நாள்… மனைவியுடன் ஈஃபில் டவரில் கொண்டாடும் நடிகர் ஆதி!

August 27, 2022 at 12:19 pm
pc

திருமணமான 100வது நாளை பிரபல நடிகரான ஆதி தனது மனைவியுடன் பாரிஸில் கொண்டாடி வருகிறார்.

தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஆதி பினிசெட்டி. தமிழில் மிருகம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தமிழில் ஈரம், அய்யனார், ஆடுபுலி, அரவான், வல்லினம். கோச்சடையான், யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம், யூடர்ன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகை நிக்கி கல்ராணி

கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் க்ளாப். தற்போது தி வாரியர் மற்றும் பார்ட்னர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். யாகாவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய படங்களில் நடிகை நிக்கி கல்ராணியுடன் இணைந்து நடித்தார் ஆதி பினிசெட்டி.

ஆதி நிக்கி திருமணம்

அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆதி வீட்டு விசேஷங்களில் நிக்கி கல்ராணி பங்கேற்று வந்ததால் இருவருக்கும் காதல் என அரசல்புரசலாக தகவல் பரவியது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். கடந்த மே மாதம் இருவரும் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் விமரிசையாக திருமணம் செய்து கொண்டனர்.

100 நாட்கள்

தற்போது திருமணம் முடிந்து 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இருவரும் பாரிஸில் கொண்டாடி வருகின்றனர். பாரிஸில் இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஆதி, இது நம்முடைய 100வது நாள் பேபி… இன்னும் 25,550 நாட்கள் போக வேண்டும் என குறிப்பிட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இன்று போல்…

ஆதியின் இந்த பதிவுக்கு அவரது மனைவியான நிக்கி கல்ராணி, ஒரு சூப்பரான சாகச வாழ்க்கை உள்ளது… இன்று போல்… நான் உங்களை நேசிக்கிறேன்… என குறிப்பிட்டுள்ளார். ஆதி மற்றும் நிக்கியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website