திருமண நிச்சயம் செய்த ஜோடி ஓட்டலில் விபரீதமுடிவு..!

May 12, 2023 at 1:19 pm
pc

மத்திய பிரதேசத்தில் திருமண நிச்சயம் ஆன நிலையில், ஓட்டலில் ஜோடி ஒன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் சன்வர் சாலை பகுதியில் வசித்து வந்தவர் கபில் சாகு (வயது 23). இவருக்கும் நிஷா என்பவருக்கும் திருமணம் செய்வது என நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், கபில் தனது பெற்றோரிடம் விஜய் நகர் பகுதிக்கு செல்கிறேன் என கூறி விட்டு காலை நேரத்தில் சென்று உள்ளார். ஆனால், மதியம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், கபிலின் தந்தை அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

அப்போது, கபில் விஷம் குடித்த தகவலை, அவருடன் இருந்த நிஷா தெரிவித்து உள்ளார். அவரும் விஷம் குடித்திருக்கிறார். தங்களை காப்பாற்றும்படியும் அவர் கோரியுள்ளார். அவர்கள் இருவரும் ஓட்டலில் தங்கி இருந்து உள்ளனர். 

ஆனால், எந்த ஓட்டல் என தெரியாமல் கபிலின் உறவினர்கள் பல இடங்களில் தேடி மாலையில் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். ஓட்டல் பணியாளர்கள் உதவியுடன் மாற்று சாவி அறையை உடைத்து உள்ளே சென்றபோது, கபில், நிஷா இருவரும் சுயநினைவற்று கிடந்து உள்ளனர். 

அவர்களை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதில் பலனின்றி அவர்கள் உயிரிழந்து விட்டனர் என மருத்துவர்கள் கூறி உள்ளனர். பொதுவாக, திருமணம் செய்வதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும்போது இதுபோன்ற தற்கொலை முடிவை காதல் ஜோடிகள் எடுப்பது வழக்கம். 

ஆனால், திருமண நிச்சயம் செய்த ஜோடி ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது. போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website