திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சுருண்டு விழுந்து இறந்த மணமகன்!

July 23, 2022 at 6:49 am
pc

கர்நாடக மாநிலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றில் மணமகன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் – விஜயநகரா மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹோண்ணூறு சுவாமி(26). அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தடபுடலாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பதியர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தன்னிலை மறந்து காணப்பட்ட புது மாப்பிள்ளை நெஞ்சு வலி தாங்காமல் மேடையில் அமர்வதும், எழுவதுமாய் அவஸ்தைப்பட்டுள்ளார்.

நெஞ்சுவலிப்பதாக உறவினர்களிடம் கூற இது அஜீரண கோளாறாக இருக்கலாம் என கருதிய புது மாப்பிள்ளைக்கு சோடா கொடுத்துள்ளார்கள்.

சோடா குடித்ததும் சுயநினைவை இழந்த ஹோண்ணூறு சுவாமி மேடையிலே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அங்குள்ள கிராம மருத்துவமனைக்கு ஹோண்ணூர் சுவாமியை அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது ஹோண்ணூர் சுவாமி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அங்கிருந்தவர்கள் பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website