ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அன்னபூரணி. கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளிவந்த இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கார்த்திக் குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது. வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லை. இதன்பின் மிக்ஜாம் புயல் காரணமாக இப்படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டது.இதை தொடர்ந்து பெரிய ஹீரோ படங்கள் வந்த நிலையில் தற்போது நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தை வருகிற 29ஆம் தேதி ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தில் வெளிவரும் அன்னபூரணி படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.