தீக்காய தழும்புகள் மறைவதற்கான அற்புத மூலிகையை பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாம் வாங்க …!!

தேவையான பொருட்கள்.:
சோற்று கற்றாழை (உட்பகுதி) – 50 கிராம்,
தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
செய்முறை.:
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு சோற்று கற்றாழையை (உட்பகுதி) எடுத்து அதனை நன்றாக அரைத்து சாறு போல் மாற்ற வேண்டும்.
இந்த சாற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு லேசான சூட்டில் சூடு படுத்த வேண்டும்.
மேலும் இதனுடன் 100 மி.லி தேங்காய் எண்ணெயையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனை தைலம் ஆக மாறும் வரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.
இவ்வாறு உருவான தைலத்தை தீக்காயத்தின் மேல் தொடர்ந்து போட்டு வந்தால் தீக்காய தழும்புகள் உடலில் இருந்து அறவே நீங்கும்.