தீராத மார்புச்சளி,இருமல்,தொண்டைப்புண் சரியாக எளிய இயற்கை மூலிகை டீ

May 23, 2022 at 3:52 pm
pc
தேவையான மூலிகைகள்:

1.கற்பூரவள்ளிச்சாறு – 10 மி
2.கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்
3.மிளகு – 10 கிராம்
4.சுக்கு – 50 கிராம்
5.திப்பிலி – 50 கிராம்

செய்முறை:

மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தையும் (கற்பூரவள்ளி சாறு தவிர) நன்கு காயவைத்து சுத்தம் செய்து வைத்து கொள்ளுங்கள்

சுத்தம் செய்த அனைத்தையும் நன்றாக அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்

200 மி நீரை நன்கு கொதிக்க வைத்து அதில் 1 ஸ்பூன் அளவு அரைத்த பொடியை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்

கொதிக்கும் நீரை நன்கு சுண்டியதும் அதில் கற்பூரவள்ளி சாறு 10மி அளவு 2 ஸ்பூன் அளவுக்கு கலந்து டீ குடிக்கும் பதத்தில் தயார் செய்து கொள்ளுங்கள்

சாப்பிடும் முறை:

மேற்கூறிய படி தயார் செய்த டீ தினமும் இரவு உணவுக்கு பின் மட்டுமே குடிக்க வேண்டும்…அதுவும் சூடாக குடிக்கவும்

மருத்துவ பயன்கள்:

1.மார்பு சளி,கட்டி சளி தீரும்
2.நெஞ்செரிச்சல்,இருமல் நீங்கும்
3.வயிறு புண்,தொண்டை புண் சரியாகும்
4.காய்ச்சல் சரியாகும்
5.உடல் சோர்வு நீங்கி சுறுசுருப்பாகும்…

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website