துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்!!திமுக சிறுபான்மையினர் கோரிக்கை …

May 4, 2022 at 10:49 am
pc

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக சிறுபான்மையினர் பிரிவு சார்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு 

ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இறைவனை தொழுதனர். மேலும் புத்தாடை அணிந்து உற்றார், உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்

அப்போது , மசூதி வளாகத்தில் ! பிரிவை சேர்ந்த ஜே.எம்.பஷீர் செய்தியாளர்களிடம் கூறியது:

ஜகாத் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் ஒரு கடமை. நாம் சம்பாத்தியத்தில் மூன்றில் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டும். இஸ்லாம் என்பது மதம் இல்லை; அதுவொரு மார்க்கம். 30 நாட்கள் நோன்பு இருந்து இன்று விரதத்தை முடித்துள்ள இஸ்லாமிய சகோதரர்கள், இன்று ரமலான் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை காயிதே மில்லத்தின் மறு உருவமாக பார்க்கிறோம். காயிதே மில்லத் இருந்திருந்தால் இஸ்லாமியர்களுக்கு என்ன நல்லது செய்வார்களோ அதைவிட ஒருபடி மேலே போய் திராவிட ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் கூடிய விரைவில் அமைச்சராக உள்ளார் என்று தகவல் பரவி வரும் நிலையில், அவரை துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவுக்குள்ளேயே கோரிக்கை எழுந்துள்ளதால் உடன்பிறப்புகள் குழப்பம் அடைந்துள்ளனர்.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website