துபாயில் இருந்து இரங்கல் தெரிவித்த அஜித்.. பிரேமலதாவுக்கு தொலைபேசியில் ஆறுதல்..!

December 29, 2023 at 7:16 pm
pc

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு தற்போது துபாயில் இருக்கும் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளதோடு தொலைபேசியில் பிரேமலதா விஜயகாந்துக்கு ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை காலமான நிலையில் அவருக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்பட பல திரை உலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமின்றி நூற்றுக்கணக்கான திரை உலக நட்சத்திரங்கள் இன்னும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்ற நடிகர் அஜித் தற்போது துபாயில் உள்ளார். இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் அவர் மீண்டும் அஜர்பைஜான் சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் விஜயகாந்த் மறைவு குறித்து கேள்விப்பட்ட அஜித், உடனே பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர் அஜித் என்பதும் அனைவரும் அறிந்தது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website