தூங்கிக்கொண்டிருந்த தம்பதியை கோடாரியால் வெட்டிக்கொன்ற பயங்கரம்!

September 8, 2022 at 11:22 am
pc

உணவுக்காக சண்டையிட்டு தூங்கிக் கொண்டிருந்த தம்பதியை வீட்டுப் பணியாளர் ஒருவர் கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரிச்சர்ட் மற்றும் மெலனி மின்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர். பலத்த காயமடைந்த அவர்களது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தாக்குதலின் போது தப்பி ஓடிய தம்பதியின் மகன் நடந்த சம்பவத்தை மற்றவர்களிடம் கூறியுள்ளார். வீட்டு வேலைக்காக வந்த சத்யேந்திரன் என்பவர் தனது தாய், தந்தையை கொலை செய்ததாக மகன் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளி சத்யேந்திர லக்ராவை கைது செய்தனர். 

சில நாட்களுக்கு முன்பு, குற்றவாளியான சத்யேந்திர லக்ரா, ரிச்சர்ட் மின்ஸுடன் உணவு தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் குடும்பத்தை கொல்ல முடிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சத்யேந்திர லக்ரா கூறியதாக போலீஸ் அதிகாரி கூறினார். இவர், மது போதையில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website