தேர்வில் காப்பி அடித்ததை கண்டித்த ஆசிரியர்:14 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவர் தற்கொலை!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கே.கே நகரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் காப்பி அடித்ததாக கூறி ஆசிரியர் அவரை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளியின் அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 14 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். மாணவனின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகமே காரணம் என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தேர்வில் காப்பி அடித்ததை கண்டித்தது உண்மை எனவும், பெற்றோரை அழைத்து வரும்படி கூறியதால், மாணவன் தற்கொலை முடிவை எடுத்துவிட்டதாகவும் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.