தொடரும் கனமழை…விடுமுறைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரித்துள்ளது. கனமழை எச்சரிக்கையால் நாளை (நவம்பர் 16) விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.