தொடரும் தற்கொலை!! செல்போன் தராததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

October 20, 2022 at 8:02 am
pc

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த குதிரைசாரி குளம் பகுதியை சேர்ந்தவர் தில்லையப்பன். இவரது மகள் முத்து பிரியா (17). இவர் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், முத்துபிரியா படிப்பில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி செல்போனில் மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்து படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர். மேலும், அவரிடம் இருந்து செல்போனையும் வாங்கி வைத்துக் கொண்டுள்ளனர். 

இதனால் மன வேதனையடைந்த முத்துபிரியா, பெற்றோரிடம் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தரவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட முத்துபிரியா, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு பெற்றோர் மற்றும் உறிவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website