தொண்டை வலி, தொண்டை புண்ணை சரி செய்ய ஆப்பிள் சிடார் வினிகரை பயன்படுத்தலாமா …..?
பாக்டீரியாக்கள், வைரஸ், அழற்சி போன்ற பல்வேறு காரணங்களால் தொண்டை வலியும் தொண்டைப் புண்ணும் உண்டாகிறது. பெரும்பாலும் தொண்டை வலி ஏற்பட்டு ஒரு வாரத்துக்குள் அது தானாகவே சரிசெய்து கொள்ளும். ஆனால் சிலவற்றிற்கு நாம் ஏதாவது மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக வீட்டு வைத்தியங்கள் தான் பெரும்பாலும் இதற்கு கைகொடுக்கும். அதில் தொண்டை வலி மற்றும் தொண்டைப் புண்ணை சரிசெய்வதில் ஆப்பிள் சிடார் வினிகருக்கு பெரும் பங்குண்டு.
ஆப்பிள் சிடார் வினிகரை எப்படி எடுத்துக் கொள்ளலாம்?
ஆப்பிள் சிடார் வினிகர் சேர்க்கப்பட்ட பெரும்பாலானவை தொண்டைக்கு இதமளிக்கிறது. தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சினை, சளி போன்றவற்றிற்கு ஆப்பிள் சிடாரை வினிகரை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
ஆப்பிள் சிடார் வினிகரும் தேனும்:
ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகருடன் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இது தொண்டைக்கு இதமளிப்பதோடு தொண்டை வலியையும் குறைக்கும்.
ஆப்பிள் சிடார் வினிகர் டீ:
2 ஸ்பூன் ஆப்பள் சிடார் வினிகரும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறும் சேர்த்து அதனுடன் ஒரு கப் அளவுக்கு வெந்நீர் சேருங்கள். இதை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு க்ரீன் டீ பேக்கை சேர்த்து குடிக்க வேண்டும்.
இப்படி எடுத்துக் கொள்வதன் மூலம் இதிலுள்ள ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் தொற்றுக்க்ள ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் அதுவும் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
வாய் கொப்பளித்தல்:
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பும் 2 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரும் சேர்த்து கலந்து, அதில் வாய் கொப்பளிக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு காலையிலும் மாலையிலும் வாய் கொப்பளித்து வர, தொண்டை வலி மற்றும் தொண்டைப்புண் ஆகியவற்றை சரிசெய்யும்