தொழுகைக்கு அழைத்த தந்தை!கத்தியால் குத்தி கொலை செய்த மகன் …

April 19, 2022 at 6:27 am
pc

ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் (70). பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவருக்கு, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள் மற்றும் மூத்த மகன் வெளியூரில் உள்ள நிலையில், கடைசி மகன் இம்ரான் மட்டும் தந்தை இக்பாலுடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில், இம்ரான் தனது தாய் மறைவிற்குப் பிறகு சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இக்பால் தனது மகன் இம்ரானை தொழுகைக்குச் செல்ல வருமாறு கூறியுள்ளார். ஏற்கனவே மன குழப்பதில் இருந்த இம்ரான் கடும் கோபத்தோடு அதற்கு மறுத்துள்ளார். 

தொடர்ந்து இக்பால் இம்ரானை தொழுகைக்கு செல்ல வலியுறுத்தியால் ஆத்திரம் அடைந்த இம்ரான் தனது தந்தை இக்பாலை வீட்டில் இருந்த கத்தியை கொண்டு கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இக்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆற்காடு நகர போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.  

தொடர்ந்து இம்ரானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website