த்ரிஷாவை பற்றி நான் அப்படி சொல்லவே இல்லை.

February 21, 2024 at 7:37 pm
pc

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் த்ரிஷா குறித்து நான் அப்படி சொல்லவே இல்லை என்றும் எனது கருத்து திரித்து வெளியாகி உள்ளதாக அந்தர் பல்டி அடித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு, கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த கூவத்தூர் சம்பவம் குறித்து கூறுகையில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அவருடைய கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் குரல் கொடுத்தனர். த்ரிஷாவும் இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தான் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதை அறிந்த ஏவி ராஜு அதன் பின்னர் வெளியிட்ட வீடியோவில் தனது கருத்து திரித்து வெளியிடப்பட்டுள்ளதாகவும், த்ரிஷா போல் ஒரு பெண் வேண்டும் என்று தான் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் கூறியதாக நான் தெரிவித்தேன் என்றும் கூறியுள்ளார்.

த்ரிஷா குறித்து நான் சர்ச்சைக்குரிய வகைகள் எதையும் கூறவில்லை என்றும் அதையும் மீறி அவர் மனம் புண்பட்டிருந்தால் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் இந்த விஷயம் இதோடு முடிக்கப்படுமா அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website