த்ரிஷா மீது வழக்கு: மன்சூர் அலிகானுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

December 22, 2023 at 10:10 pm
pc

நடிகை த்ரிஷா பற்றி ஒரு பேட்டியில் கொச்சையாக பேசிய மன்சூர் அலி கானுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையும் கொந்தளித்தது. த்ரிஷா கோபமாக போட்ட ட்விட்டுக்கு பிறகு, மன்சூருக்கு எதிராக லியோ இயக்கும் லோகேஷ் கனகராஜ் உட்பட பலரும் பதிவிட்டனர்.

அதன் பின் மன்சூர் மன்னிப்பு கேட்டு ஒரு பதிவை போட்டார். போலீஸ் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டதால் நடவடிக்கை வேண்டாம் என த்ரிஷா கூறிவிட்டார்.

இந்நிலையில் தனது புகழை கெடுத்ததாக த்ரிஷா, சிரஞ்சீவி, குஷ்பு ஆகியோர் மீது மன்சூர் வழக்கு தொடர்ந்தார்.

நடிகை த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கூறிய நீதிமன்றம், மன்சூர் அலி கானுக்கு 1 லட்சம் ருபாய் அபராதம் விதித்து இருக்கிறது.

த்ரிஷா பெருந்தன்மையாக மன்னித்த நிலையில், மன்சூர் அலி கான் தேடி சென்று இப்படி நீதிமன்றத்தில் பல்பு வாங்கி இருக்கிறார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website