நகைக்காக- பட்டப்பகலில் 2 பெண்கள் வெட்டிக்கொலை
அரியலூர் மாவட்டம் பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மலர்விழி(29), கண்ணகி(40). நேற்று காலை இருவரும் சமையல் செய்வதற்காக அருகில் உள்ள வயலுக்கு காளான் பறிப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்களது குடும்பத்தார் வயல் பகுதிக்கு சென்று தேடியுள்ளார். அப்போது அங்கு மலர்விழி, கண்ணகி ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களை கைப்பற்றினர். அப்போது, கொலை செய்யப்பட்ட பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் நகைகளை காணவில்லை என்பது தெரியவந்தது. இதனால் நகைகளுக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்