நடிகர்கள் அஜித், விஜய் மீது போலீசில் புகார்

January 13, 2023 at 11:58 am
pc

சென்னையில் துணிவு திரைப்படம் பார்க்க சென்ற 19 வயது இளைஞர் உயிரிழந்த விவகாரம் மற்றும் பிளக்ஸ், கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தது தொடர்பாக நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை கோரி சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு இணைய வழியாக சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார். உயிரிழந்த ரசிகர் குடும்பத்திற்கு அஜித் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தலா ரூ.1 கோடி வழங்கவும் கோரியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website